புதன், 9 ஜூன், 2010

என்னை பற்றி.

வணக்கம் அன்பர்களே,
வாழ்க வளமுடன். என் பெயர் சி.அயோத்திராமன். சொந்த ஊர் மதுரை அருகே அலங்காநல்லூர். திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றுகிறேன்.என் வயது ஆன்மிகம் சம்பந்தமாக பேசுவதெனில் ஐம்பதுக்கு மேல், காதல்,கவிதை, சம்பந்தமாக பேசுவதெனில் பதினாறுதான்.வலைபதிவில் எழுதுவதன் நோக்கம், இயல்பாகவே எனக்கு மொக்கை போடுவதெனில் அலாதி பிரியம். அதுவும் புதிதாக ஏதேனும் ஒரு செய்தியை தெரிந்து கொண்டால் யாரிடமாவது பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும். இல்லையேல் அடியேனுக்கு தலை வெடித்து விடும். நேர்முகமாக மொக்கை போடுவது இன்னும் சலிக்கவில்லை என்றாலும் இணையதளத்தில் மொக்கை போட்டால் என்ன? என்று அடியேனின் உள்மனது சொன்ன காரணத்தால் இப்படி எழுத வேண்டியதாயிற்று. புத்தகங்கள் மூலமாக நான் தெரிந்து கொண்டது, இணையதளங்களில் நான் தேடிக் கிடைக்காத மற்றும் நான் தேடித் தெரிந்து கொண்ட விஷங்களையும், என்னுடைய அனுபவங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அடுத்தடுத்து வர இருப்பவை அடியேனின் கட்டுரைகள், யோகா, தியானம், போட்டி தேர்வுகளை பற்றிய விஷயங்கள்,வரலாறு, பொதுஅறிவு, உபநிடதங்களின் தமிழ் மொழிப்பெயர்ப்புகள், பொதுவுடைமை சித்தாந்தம், ஸ்ரீமத் பகவத்கீதை, ஆன்மீக கட்டுரைகள், புத்த மதத்தின் புனித நூலான தம்மபதம், உளவியல், நான் எழுதிய கவிதைகள் (காதல் கவிதைகளும்தான் ). அனைத்தையும் படித்துவிட்டு பதிலுக்கு நீங்களும் மொக்கை(உங்களின் கருத்துகள்) போடுமாறு கேட்டு கொள்கிறேன். வாழ்க வளமுடன். நன்றி .

2 கருத்துகள்:

DevaSoftware சொன்னது…

i saw your blog that is very interesting.also give very good mokkai.i m also like to join in the mokkai family

C.Ayothiraman சொன்னது…

always welcome nanba.